Saturday, February 28, 2009
யார் பிள்ளை?
Wednesday, February 25, 2009
தாமரை சூத்திரம்
அவள் ஒரு பேரழகி.அவளை மணக்க பல இளைஞர்கள் போட்டி போட்டனர்.ஆனால் அவளோ யாரிடத்திலும் விருப்பமில்லாது இருந்தாள்.அவளுடைய தாய் மிகவும் வற்புறுத்திய பின் ஒரு நிபந்தனை உடன் சம்ம்மதித்தாள்.என்ன நிபந்தனை என்றால் புத்தரின் தாமரை சூத்திரத்தை யார் நாளை காலைக்குள் மனப்பாடம் செய்து பிழையில்லாது சொல்கிறார்களோ அவரையே மணப்பேன் என்றாள். தாமரை சூத்திரமோ மிகவும் பெரியது .அதை ஓரிரவுக்குள் மனப்பாடம் செய்வது என்பது எளிதல்ல . இருப்பினும் அந்த அறிவிப்பை கேட்டு மறு நாள் காலை 300 பேர் வந்திருந்தனர்.ஒரு பெண் 300 பேரை மணப்பது சாத்தியமா? எனவே யார் இந்த சூத்திரத்துக்கு நாளை பொருள் கூறுகிறார்களோ அவரையே மணப்பேன் என்றாள். மறு நாள் வெறும் 3 பேராக எண்ணிக்கை குறைந்து விட்டது.மூவரை எப்படி மணப்பது யார் இதை அனுபவித்து உணர்ந்தார்களோ அவரையே மணப்பேன் என்று சொல்லி விட்டாள்.மறுநாள் ஒருவன் மட்டுமே வந்தான்.அவளது தாய் "வீட்டின் பின்புறம் அவள் உனக்காக காத்திருக்கிறாள்"என்றாள்.இவன் சென்றவுடன் அவள் அங்கு இல்லை ஆனால் அவளின் காலணிகள் அங்கு இருந்தன .அதற்கு மேல் வெட்டவெளியாக இருந்தது திரும்பி பார்த்தான் அந்த வீடும் அங்கு இல்லை.சிரித்தான்.அவனுக்குப் புரிந்து விட்டது.
இது சத்தியமா எனக்குப் புரியலீங்க.புரிஞ்சவங்க எனக்கு சொல்லுங்க.
Sunday, February 22, 2009
நான் கடவுளா?
இல்லை , நான் எழுதப் போவது திரைப்பட விமர்சனம் அல்ல.கடவுள் நம்பிக்கை ,ஜோதிடம் ,மதம் சார்ந்த நம்பிக்கைகள் பற்றி ஆளாளுக்கு பதிவுகளை போட்டு பயங்கரமாய் விவாதம் செய்கிறபோது நான் மட்டும் தேமேயென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் கருத்து கந்தசாமி ஆகி விடுவது என்று முடிவெடுத்து விட்டேன். என்ன நான் கொஞ்சம் லேட். கடவுள் ,மதம் என்பது எல்லாம் தனி நபர் நம்பிக்கை என்றெல்லாம் ஜல்லியடிக்கப் போவதில்லை.இது ஒரு குழப்பமான விஷயம்.இருக்குப்பா என்று சொன்னால்சில பேர் படித்து விட்டு போவார்கள் ,இல்லை என்று சொன்னால் போதும் நிறைய பேர் படிப்பதோடு மட்டுமல்லாமல் கமென்ட் பண்ணுவார்கள் என்று நினைத்து இந்த பதிவை போடவில்லை (நம்ம்புங்க சார்).
கடவுள் நம்பிக்கை என்பதை அடிப்படையாக வைத்து மக்களை மூன்று விதமாகப் பிரித்திருக்கிறார்கள்,ஆஸ்திகர்கள்,நாஸ்திகர்கள்,ஆஸ்திகநாஸ்திகர்கள் (அதாவது ரெண்டுங்கெட்டான்). விபரம் தெரியாத வரை எல்லோரும் ஆஸ்திகர்களே,கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் சில பேர் நாஸ்திக கரை ஒதுங்குவார்கள் தைரியமாக,பலர் ஆஸ்திகர்கள்,என்னைப் போன்று நட்டாத்தில் நின்று கொண்டு எந்த பக்கம் ஒதுங்குவது என்று பேந்தப் பேந்த முழிப்பவர்களுக்கு இந்த பதிவு.ஓவர் பில்ட் அப் வேண்டாம் விஷயத்திற்கு வருகிறேன்.
கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை எதனால் ஏற்பட்டிருக்கக் கூடும், அல்லது யாரால் ஏற்படுத்தப் பட்டிருக்கக் கூடும்.தனி ஒரு மனிதன் ஒரே நாளில் இந்த மாற்றத்தை கொண்டு வந்திருக்க முடியாது.இயற்கையிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் ,தன்னை விட சக்தி வாய்ந்ததான ஒன்றைப் பணிந்து வணங்கும் பழக்கத்தின் அடிப்படை என்னவாக இருக்க முடியும்?உயிர் பயம்.அல்லது காட்டுமிராண்டிகளாக இருந்த மனிதனை வழிக்கு கொண்டு வர யாராலோ ஏற்படுத்தப்பட்ட ஒரு கற்பனை.நாளடைவில் அதற்குப் பல்வேறு முகங்கள் ஏற்பட்டு விரிவடைந்திருக்க வேண்டும்.சடங்குகளை ஏற்படுத்தி அதை தொடர்வதால் உண்டாகும் நன்மைகளின் பட்டியல் ஏற்பட்டு விட்டது இப்போது.
கடவுள் இருக்கிறாரா இல்லையா?என்று யோசிக்கக் கூடத் தயாராக இல்லை பலர்.என் நண்பர் ஒருவரிடம் சில வருடங்களுக்கு முன் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது அவர் சொன்னது,"உன் தாய் கற்புடையவள் என்பதை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ளாய்? பிறக்கும் குழந்தைக்கு தகப்பன் நீதான் என்பதை எப்படி நம்புகிறாயோ அப்படித்தான் இதுவும்"என்று கொதித்தார்.sensitive விஷயம்.
எங்கும் நிறை பரப்ரம்மம்,ஆதியும் அந்தமும் இல்லாத,இது என்னவாக இருக்க முடியும்?அறிவியல் ரீதியாக கதிர் வீச்சு இல்லாத பொருள்களே இல்லை என்கிறார்கள் .மரம் ,செடி கொடிகளில் இருந்து மனிதன் வரை.காந்தக் கதிர் வீச்சுக்கள் அல்லது magnetic field , அல்லது ஆரா Body என்று அழைக்கப்படும் . இது மனிதனின் ஆரோக்கியத்துக்கும் துணை புரிகிறது .இது பாதிக்கப் பட்டால் உடல் நோயுறும் என்கிறார்கள். இது வேறொன்றுமில்லை ,நம் உடல் சேகரித்து வைத்திருக்கும் cosmic energy தான்.ஒரு பாட்டரி போல. ஆக வெளியில் இருப்பதுதான் உள்ளேயும் இருக்கிறது ,அல்லது எங்கும் இருக்கிறது.
சரி இதில் கடவுள் எங்கே வருகிறார் ?எங்கேயும் வரவில்லை.இருப்பதெல்லாம் மனிதன் மட்டுமே.இந்த cosmic energy என்பதைக் கொண்டு நிறைய விஷயங்கள் பண்ணலாம்.நோய்களை குணப்படுத்துவது உட்பட.சாமியார்கள் செய்வது இதைத்தான்.ஆனால் இது எல்லாராலும் முடியும்.ஜப்பானியர்கள் இதை reiki என்று பெயரிட்டு இதை எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள்.மனோ சக்தி பல அற்புதங்களைச் செய்யக்கூடியது.ரெய்கியின் அடிப்படைத் தத்துவம் அதுதான்,cosmic energy யை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்,உங்கள் மனம் அதற்கு எந்த அளவு உபயோகப்படும் என்றெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்கள்.
ஆரம்ப காலங்களில் இந்த தத்துவத்தை எளிதாக சொல்லப் போய் அது கை கால்கள் முளைத்து வேறு வடிவத்துக்கு வந்து விட்டது.சரி அப்படியென்றால் கோவில்கள் எதற்கு?அவை எனர்ஜியை சேமிக்கும் பெரிய பாட்டரி.கோவிலுக்கு போனால் அது உங்களுக்குள் புகும் என்பதால்தான்.உங்களிடம் இருந்து கோவிலுக்குள்ளும் பரவும்.அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு.எனவேதான் பழைமையான கோவில்களில் ஒரு தனி நிம்மதி relaxation ஐ உணர்கிறீர்கள் .புதிதாக கட்டப்பட்ட கோவில்களில் அது கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு.
சரி நாம் செய்யும் பிரார்த்தனைகள் நிறைவேறுவது எப்படி ? அல்லது நிறைவேறாமல் போவது எப்படி?என்றால் அதற்கு நீங்கள்தான் காரணம். ஒரு சரியான, மனம் ஒருமுகப்பட்ட , பிரார்த்தனை நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.அது அந்த இடத்தில் பல மடங்காக replicate ஆகிறது .அப்படி பிரார்த்தித்தால் கோவிலில்தான் என்று இல்லை எங்கும் அது நிகழ வாய்ப்பு உண்டு.செயல்படுவது முழுக்க முழுக்க உங்கள் கைகளில்தான் இருக்கிறது.இதைப் பற்றி தனியாக ஒரு பதிவே போடலாம்.ஏனெனில் இந்தப் பதிவைப் படிக்கும் போதே உங்களுக்கு புரிந்திருக்கும் எனக்கு எதையும் சுருக்கமா சொல்லத் தெரியாதுன்னு.
இருப்பினும் சுருக்கமாக சொல்ல முயற்சித்தால், நீங்கள் கடவுள் என்று சொல்லிக் கொண்டிருப்பது ஒரு காந்த சக்திப் புலத்தை, அதன் செயல்களை எளிதாகச் சொல்ல முன்னோர்கள் கையாண்ட விதம் வேறொன்றாக மாறி அல்லது மாற்றி புரிந்துகொள்ளப்பட்டு வேரூன்றி கிளை பரப்பி அசைக்க முடியாமல் ஆகிவிட்டது இப்போது.அதற்காக ஏற்படுத்தப்பட்ட சில வழிமுறைகள் மருவி வெறும் சடங்காக மாறி விட்டது.கையில் இருப்பது வெறும் சாவிதான்.எந்தப் பூட்டை திறக்கும் என்கிற விவரத்தையெல்லாம் எப்போதோ தொலைத்தாயிற்று.
Monday, February 16, 2009
முல்லா

முல்லா ஒரு வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குச் சென்றார்.அது ஒரு கப்பலில் உள்ள வேலை.முன் அனுபவம் எதுவும் இல்லாத முல்லாவைப் பார்த்து அந்த முதலாளி எரிச்சலுடன் கேள்வி கேட்க ஆரம்பித்தார்."நீ கப்பலில் சென்று கொண்டிருக்கிறாய்,அப்போது பெரிய அலை ஒன்று வருகிறது,உதவிக்கோ அங்கு யாருமில்லை .என்ன செய்வாய்?"என்றார்.முல்லா சிறிதும் யோசிக்காமல்"கப்பலில் உள்ள கனமான நங்கூரத்தை எடுத்து வெளியில் போடுவேன்"என்றார்."இன்னுமொரு மிகப்பெரிய அலை வருகிறது!அப்போது?".முல்லா"மீண்டும் அதிக கனத்தை வெளியில் இறக்குவேன்"என்றார்."மீண்டும் அதை விடப் பெரிய அலை ஒன்று வந்தால்.."முல்லா"மீண்டும் அதிக கனமான பொருளை கப்பலில் இருந்து தொங்க விடுவேன்"என்றார்.எரிச்சலான முதலாளி "அந்த கனமான பொருள்களை எங்கிருந்து பெறுவாய்?"என்றார்.முல்லா அமைதியாக "நீங்கள் அந்த அலைகளை எங்கிருந்து பெறுவீர்கள்? என்றார்.
முல்லா

**********
முல்லா தன் நூறாவது பிறந்த நாளை கொண்டாடியபோது மக்கள் அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டு எப்படி அவர் நூறு வயது வாழ்கிறார்,அவருடைய ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன ?என்று கேட்டனர்.முல்லா " நான் மதுவை தொட்டதே இல்லை,பெண்களை ஏறெடுத்தும் பார்த்ததில்லை,இதுதான் நூறு வயதின் ரகசியம் "என்றார். அப்போது வீட்டினுள் பாத்திரங்கள் உருளும் ஓசையும்,குழப்பமான சப்தங்களும் கேட்டன.முல்லா"யாரும் பயப்பட வேண்டாம்.அது என் அப்பாதான்.ரொம்ப மோசம்.கண்டபடி குடித்துவிட்டு வேலைக்காரியை துரத்திக் கொண்டிருப்பார்"என்றார்.
Thursday, February 12, 2009
மரணத்திலிருந்து தப்பி....

ஒரு அரசன் மரணம் தன்னை நெருங்குவதைப் போல கனவு கண்டான்.அதில் ஒரு கரிய உருவம் "நாளை மாலை நான் உன்னை கொண்டு செல்வேன் தயாராக இரு"என்று சொல்லி விட்டு மறைந்தது.அதிர்ச்சி அடைந்த அரசன் அந்த இரவில் தன் அவையைக் கூட்டினான். மந்திரிகள்,சோதிடர்கள்,பல்கலை வித்தகர்கள் அடங்கிய அந்த அவையில் தனக்கு நேர்ந்ததை விவரித்தான்.என்ன செய்வது என்று கேட்டான்.உடனே எல்லோரும் கூடி விவாதிக்கத் தொடங்கினர்.நேரம் சென்று கொண்டே இருந்தது ,ஆனால் யாரும் ஒரு முடிவுக்கு வரவில்லை . ஆளாளுக்கு தங்கள் கருத்தை வலியுறுத்தியும் மற்றவருடையதை ஆட்சேபித்தும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.விடியத் தொடங்கியது,அப்போது அரசனின் வயதான வேலைக்காரன் ஒருவன் மெதுவாக அவனருகில் வந்தான்.சிறு வயதிலிருந்து அரசனை வளர்த்தவன் அவன்."அரசே ! இவர்கள் எல்லாம் படித்தவர்கள்.தம்முடைய அறிவைக் காட்டுவதற்காகவே வாதம் செய்பவர்கள்.இவர்கள் எப்போதும் எந்த பிரச்சினையிலும் ஒரு முடிவுக்கு வந்ததே கிடையாது.அதோ பாருங்கள் விடியத் தொடங்கி விட்டது.எனக்கு ஒரு யோசனை,நீங்கள் உடனே இந்த இடத்தை விட்டுச் சென்று விடுங்கள்.இந்த நாட்டை விட்டு எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம்.நீங்கள் கண்ட அந்த உருவம் கண்டிப்பாக இங்கேதான் வரும் என்று எனக்குத் தோன்றுகிறது.எனவே தாமதிக்காதீர்கள்"என்றான்.அது அரசனுக்கும் சரியென்று பட்டது.அவையினரை விவாதத்தில் விட்டு விட்டு சொல்லாமல் வெளியேறினான்.தன் குதிரைகளில் சிறந்த ஒன்றின் மீதேறி பறந்தான்.எங்கும் நிற்கவில்லை,தொடர்ந்து சென்று மாலை நேரத்தில் தன் நாட்டின் எல்லையில் உள்ள ஒரு ஆற்றுப் பகுதியை அடைந்தான்.அதற்கு மேல் எதிரி நாடு.அங்கே செல்வது மரணத்திற்கு ஒப்பானது.எனவே அங்கிருந்த ஒரு மரத்தடியில் இறங்கினான்.சூரியன் மறைந்து கொண்டிருந்தது.
-ஓஷோ
Wednesday, February 11, 2009
தபு சங்கர் கவிதைகள்

லீப் வருடங்களைத்தான்
ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது.
அந்த வருடங்களில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாக வாழலாம் உன்னோடு.
***********************************
நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான் இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போதுதான்
தலைப்புடன் கூடிய கவிதையாகிறாய்.
***********************************
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது....
"ஏன் இந்த பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது?" என்று.
************************************
கூந்தலில் பூவாசனை வீசும்; தெரியும்.
இந்தப் பூவிலோ உன்
வாசனையல்லவா வீசுகிறது.
*************************************
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்..
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.
Monday, February 9, 2009
சொர்க்கமும் நரகமும்

வலையில் மாட்டியது-4

Sunday, February 8, 2009
என்னுடையதல்ல...

புத்தர் தன் பிரயாணத்தின் போது ஒரு கிராமத்தை வந்தடைந்தார். அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் மத போதகர்கள் ,புத்தரை, அவருடைய போதனைகளை வெறுப்பவர்கள்.எனவே ஆனந்தா என்ற அவருடைய பிரதான சீடர் அந்த வழியாக செல்ல வேண்டாம் என்றார்.ஆனால் புத்தர் அதை மறுத்து அந்த வழியாக சென்றார்.அவர் ஊருக்குள் நுழைந்ததுமே அந்த மதவாதிகள் அவரை சூழ்ந்து கொண்டு கண்டபடி திட்ட ஆரம்பித்தனர். ஆனால் புத்தரோ எவ்வித சலனமும் இன்றி அந்த இடத்தை விட்டுச் சென்றார்.அந்த ஊரைக் கடந்ததும் இளைப்பாற ஓரிடத்தில் தங்கினர். ஆனந்தாவால் பொறுக்க முடியவில்லை "குருவே ! அவர்கள் உங்களை எந்த அளவு கேவலமாக பேசி விட்டனர்,நீங்கள் அவர்களோடு சண்டையிட வேண்டாம் குறைந்த பட்சம் மறுப்புத் தெரிவித்து ஏதாவது சொல்லி விட்டு வந்திருக்கலாமே"என்றார்.புத்தர் அமைதியாக தான் பிச்சை எடுக்கும் திருவோட்டைக் காட்டி
"ஆனந்தா! இது யாருடையது?" என்றுகேட்டார்.
"இது உங்களுடையது"
"இல்லை இது உன்னுடையது ,இதை நான் உனக்கு கொடுத்து விட்டேன்" என்றார்.சிறிது நேரம் சென்றதும் மீண்டும்"ஆனந்தா!இது யாருடையது ?" என்று கேட்டார்.
"இது என்னுடையது ஸ்வாமி!"
"எப்படி ? இது என்னுடையது என்று சொன்னாயே?"
"ஸ்வாமி!இதை நீங்கள்தான் எனக்கு கொடுத்தீர்கள்.நான் அதை ஏற்றுக் கொண்டதால் இது என்னுடையதாயிற்று"என்றார்.
"ஆம் , நான் கொடுத்ததை நீ ஏற்றுக் கொண்டதால் அது உன்னுடையதாயிற்று ,அவர்கள் என்னைக் குறித்துச் சொன்னவைகளை நான் ஏற்றுக் கொள்ளவில்லை,எனவே அவை என்னுடையதல்ல"என்றார்.